முற்றதில் குடையாய் நிற்கும் தென்னை மறக் கீற்றோலி
தூரத்தில் தோன்றும் மருத மலை சாரல் துளி
அங்கே மெதுவாய் நகர்ந்து வரும்
தென் மேற்கு பருவ மேகம்
மஞ்சள் தோட்ட நறு மணக காற்று
ஆணை மலை அருவி கீற்று
கருப்பு வெள்ளை பூனை குட்டி
வரி வரியாய் அலை பாயும் எறும்பு கூட்டம்
வேப்ப மரக் காய் உண்ணும் கிளிக் கூட்டம்
வாசலில் மணக்கும் சானக் குழம்பு
அதில் பாந்தமாய் வரைந்த வெள்ளைக் கோலம்
முள் தாங்கும் முன் வாசல் எலுமிச்சை மரம்
இன்றும் அழகிய பூக்கள் தங்கிய மாதுளை மரம்
அடுக்கடுக்காக குலுங்கும் அரளி பூச்செண்டு
வீசும் காற்றில் மனம் கலந்த மருதாணி பூவும்
குருவிகள் கொதித் தின்று விளையாடும் சீதா பழ மரம்
தேன்றலிற்கே இதமாய் வீசி மகிழும் வாழை இலைகளும்
மஞ்சள் நிற மன்டாராபூ ,
சிவப்பு நிற சாயம்போன செம்பருத்தி
அடுக்கு மல்லிகை , பூத்து குலுங்கும் முல்லை மலர்
கண்களுக்கு இதமான நந்தியவட்டை
பூஜைக்கு உகந்த பவள மல்லி
கோடி படரத சங்கு புஷ்பம்
கூட்ட மிட்டு வளரும் நித்ய கல்யாணி
அங்கும் இங்கும் எங்கும் வளர்த்திருக்கும் கரு வேப்பிலை
வாசக் காபானாய் முன்னே விருந்து பறந்து நிற்கும் வேப்ப மரமும்
தும்பை நிறச் சேலை கடிய கிழவிகள்
கன்னங்களில் குழி விழ சிரிக்கும் குழந்தைகள்
பள்ளி குட மணி யோசை கேட்டு சிட்டை பறக்கும் சிறிவர்கள்
தெருக்களில் விறகு பொறுக்கும் தினக் கூலிக்காரர்கள்
சுதந்திர காற்றில் உல்லாசமாய் சுற்றித் திருந்து
இயற்கையில் ஒன்றி வாழும்
மனிதர் அறியா மண்ணில் உள்ள சொர்க்கம் இது